
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரியவகை மூளைக்கசிவு நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு மண்டை ஓட்டை திறந்து அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இதுகுறித்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயசிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வத்திராயிருப்பு செம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் பாலபிரசாத்(7). கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3-வது முறையாக மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான்.