• September 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் தங்கள் விவரங்களை டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தொடங்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறியவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் நிலை குறித்து அறியவும், உதவிகளை வழங்கிமீட்கவும், டெல்லியில் உள்ள , தமிழ்நாடு இல்லத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *