
சென்னை: கள்ளச்சாராயம், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தமிழகத்தை திமுக தலைகுனிய வைத்துக் கொண்டிருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்ப தாவது: தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன் என்கிறார் முதல்வர் ஸ்டாலின். முதலில் தமிழகத்தை தள்ளாட விடமாட்டேன் என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி டாஸ்மாக் கடைகளை ஸ்டாலின் இழுத்து மூடட்டும்.