• September 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி இன்று (செப்.12) முதல் வரும் அக்.5-ம் தேதி வரை நடைபெறுகிது. கண்காட்சியை ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி இன்று காலை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

நவராத்திரியை முன்னிட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி மதி விற்பனை கண்காட்சி, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சியை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தொடங்கி வைத்து, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *