
புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற அறைகள் மற்றும் நீதிபதிகளின் அறைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, பல நீதிபதிகள் தங்கள் விசாரணை நடவடிக்கைகளை காரணம் கூறாமல் ஒத்திவைத்தனர், நீதிமன்ற அறைகள் காலி செய்யப்பட்டன. மேலும், பல அமர்வுகள் உடனடியாக தங்கள் விசாரணை நடவடிக்கைகளை நிறுத்தின.