
புதுடெல்லி: 2023 கலவரத்துக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக நாளை (செப்.13) மணிப்பூர் மாநிலம் செல்கிறார். ரூ.7,300 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், ரூ.1,200 கோடி மதிப்புள்ள நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.
மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம், பிஹார் ஆகிய 5 மாநிலங்களுக்கு 3 நாள் பயணமாக பிரதமர் மோடி செல்கிறார். நாளை காலை மிசோரம் செல்லும் பிரதமர் மோடி, தலைநகர் அஸ்வாலில் ரூ.9,000 கோடி மதிப்புள்ள நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து நாளை மதியம் 12.30 மணி அளவில் மணிப்பூர் செல்லும் பிரதமர், சுராசந்பூர் நகரில் ரூ.7,300 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து, அங்கு குழுமியிருக்கும் மக்களிடையே அவர் உரையாற்றுகிறார்.