• September 12, 2025
  • NewsEditor
  • 0

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக முன்னோடிகளை எசகுபிசகாக விமர்சனம் செய்த அப்போதைய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக வெகுண்டெழுந்தது அதிமுக. அதையே சாக்காகச் சொல்லி கூட்டணியை விட்டு விலகி சூடும்பட்டது அதிமுக. அதேபோல் இப்போது பாஜக தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து என்டிஏ கூட்டணியை விட்டு விலகி இருக்கிறார் டி.டி.வி.தினகரன்.

“அண்​ணா​மலை தான் என்னை என்​டிஏ கூட்​ட​ணி​யில் சேர்த்​தார். அவர் எங்​களுக்கு உரிய மரி​யாதை கொடுத்​தார். ஆனால், அவருக்கு இருக்​கும் பக்​கு​வம் நயி​னார் நாகேந்​திரனுக்கு இல்​லை. இபிஎஸ் மட்​டும் இருந்​தால் போதும் என நினைக்​கும் நயி​னாருக்கு தமி​ழ​கத்​தின் யதார்த்த நிலை தெரிய​வில்​லை. நாங்​கள் என்​டிஏ கூட்​ட​ணியை விட்டு வில​கக் காரணம் நயி​னார் நாகேந்​திரன் தான். அண்​ணா​மலை தலை​வ​ராக இருந்​திருந்​தால் இது நடந்​திருக்​காது” என்று பொட்​டிலடித்​தாற்​போல் சொல்​லி​விட்​டார் தினகரன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *