• September 12, 2025
  • NewsEditor
  • 0

வாராணசி: பிரதமர் நரேந்​திர மோடியை, மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்​திர ராம்​மூலம் வாராணசி​யில் நேற்று சந்​தித்​துப் பேசினார். அப்​போது இரு நாடு​கள் இடையே 10 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்​திர ராம்​மூலம் 8 நாட்​கள் பயண​மாக இந்​தியா வந்​துள்​ளார். அவர் நேற்று உத்தர பிரதேசத்​தின் வாராணாசிக்கு வந்தார். பிரதமர் நரேந்​திர மோடி டெல்​லி​யில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்று காலை 10.30 மணிக்கு வாராணசி சென்​றார்.

வாராணசி தாஜ் ஹோட்​டலில் பிரதமர் நரேந்​திர மோடியை மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்​திர ராம்​கூலம் சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது விண்​வெளி, வேளாண்​மை, அறி​வியல்​-தொழில்​நுட்​பம், கடல்​சார் ஆராய்ச்​சி, நீர்​நிலைகள் குறித்த ஆராய்ச்​சி, அரசு ஊழியர்​களுக்​கான திறன்​சார் பயிற்​சி, மின்​சார உற்​பத்​தி, குறு-சிறு தொழிற்​சாலைகள் மேம்​பாடு, மிதக்​கும் சூரிய மின் உற்​பத்தி நிலை​யம் அமைப்​பது உட்பட இரு​நாடு​களிடையே 10 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *