• September 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மகாகவி பார​தியாரின் நினைவு தினத்தை ஒட்டி ஆளுநர் மற்​றும் அமைச்​சர்​கள் நேற்று பார​தி​யார் படத்​துக்கு மரியாதை செலுத்​தினர் தமிழக அரசு சார்​பில் மகாகவி பார​தி​யாரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இதையொட்​டி, காம​ராஜர் சாலை​யில் அவரது சிலை அமைந்​துள்ள இடத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் கலந்​து​கொண்டு பார​தி​யார் படத்​துக்கு மலர்​கள் தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

அவருடன் மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரி​யா, தமிழ் வளர்ச்​சித் ​துறை செயலர் வே.​ராஜா​ராமன், தமிழ்​நாடு பனைமரத் தொழிலா​ளர்​கள் நலவாரிய தலை​வர் எர்​ணாவூர் நாராயணன் உள்​ளிட்​டோரும் கலந்​து​கொண்டு பார​தி​யார் படத்​துக்கு மலர்​கள் தூவி மரி​யாதை செலுத்​தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *