
மதுரை: அதிமுக-பாஜக கூட்டணியில் பிளவு இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக வலுவாக உள்ளது. பழனிசாமி செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆரவாரத்துடன் பங்கேற்று, அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதைப் பார்த்து திமுகவினர் பொறாமையில் உள்ளனர். அதிமுகவில் பிளவு வர வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். அதனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.