
புதுடெல்லி: சமூக மாற்றத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் மோகன் பாகவத் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் 75-வது பிறந்தநாளை (செப்டம்பர் 11) முன்னிட்டு, பல்வேறு பத்திரிகைகளில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு சிறப்பு கட்டுரை எழுதியிருந்தார். அதில், “ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரே குடும்பம்) என்ற கொள்கைக்கு வாழும் உதாரணமாக விளங்குகிறார். சமூக மாற்றம், ஒற்றுமை, சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்த முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துள்ளார்.