
தூத்துக்குடி / திருநெல்வேலி: சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (27), கடந்த ஜூலை 27-ம் தேதி நெல்லையில் கொலை செய்யப்பட்டார். சாதி மாறி காதலித்ததால் நடந்த இந்த கொலை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் நேற்று ஆறுமுகமங்கலத்தில் உள்ள கவின் செல்வகணேஷ் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.