
திருப்பதி: நேபாளத்தில் உள்நாட்டு கலவரத்தில் சிக்கித் தவித்த ஆந்திராவை சேர்ந்த 144 சுற்றுலா பயணிகள், பத்திரமாக விமானம் மூலம் ஆந்திரா திரும்பினர். அவர்களை உறவினர்கள், நண்பர்கள் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனர்.
நேபாளத்தில் உள்நாட்டு கலவரத்தில் சிக்கித் தவித்த ஆந்திர சுற்றுலாப் பயணிகள், தங்களை காப்பாற்றும்படி வாட்ஸ் அப் வீடியோ பதிவு மூலம் ஆந்திர மாநில கல்வி துறை அமைச்சர் லோகேஷிடம் முறையிட்டனர். இதனை தொடர்ந்து, அவர், அமராவதி தலைமை செயலகத்திலேயே முகாமிட்டு, இதற்கென தனி அதிகாரிகளின் குழுவை உருவாக்கி, தகவல்களை சேகரித்தார்.