
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் வயதான நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காத விவகாரத்தில் ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து டீன் நடவடிக்கை எடுத்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில், தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இங்கு நடக்க முடியாத நோயாளிகளை ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டு, ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட இடங்களுக்கு சக்கர நாற்காலி (வீல்சேர்) மூலம் அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் அழைத்து செல்வார்கள்.