
நாகர்கோவில் மாநகரின் போக்குவரத்து மிக்க பகுதியான வேப்பமூடு சந்திப்பில் வாகன நெருக்கடி மிக்க சாலையின் கீழ் பகுதியில் இருந்த பெட்ரோல் டேங்க்கை முழுமையாக நிரப்பாமல் சாலை அமைக்கப்பட்டதால் ஆபத்து நிகழுமோ என்ற அச்சம் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் எழுந்த இந்த சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தில் அதிக போக்குவரத்து மிக்க நாகர்கோவில் மாநகரில் முக்கிய பகுதியாக வேப்பமூடு சந்திப்பு உள்ளது. வேப்பமூடு சந்திப்பில் சர்.சி.வி.ராமசாமி பூங்கா அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வந்தது. நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் 2017-ம் ஆண்டு அப்போதைய நகராட்சி ஆணையர் சரவணகுமார் முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்.