
பரமக்குடி: ‘பட்டியல் விலக்கே தேவேந்திரர் இலக்கு’ என்ற முழக்கத்தை முன்வைத்து அதிகாரத்துக்காக போராடி வருகிறோம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரமக்குடியில் தெரிவித்தார்.
ராமநாதபுரம் பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரன் 68-வது நினைவு தினத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் மரியாதை செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ் சமூகத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றால் தமிழினம் தாழ்கிறது என்பது எங்களது நோக்கம். தாழ்த்தப்பட்டவர் என்ற சொல்லை கவனித்தாலே தெரியும். அதில் என்னை தாழ்த்தியவன் யார் என்ற கோபம் இமானுவேல் சேகரனுக்கும் எழுந்தது.