
சென்னை: “அதிமுகவில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அமித் ஷாதான் முடிவு செய்வாரா? அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியது ஏன்?” என் திமுக எம்.பி ஆ.ராசா கேள்விகளை எழுப்பி விமர்சித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி இன்று செய்தியாளர்களிடம் கூறியது “தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கவும், ஒன்றிய அரசால் நடத்தபடுகின்ற கூட்டாட்சி தத்துவத்தின் படுகொலைக்கு எதிரான எதிராகவும், எல்லா தளங்களிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கின்ற, காலச்சாரத்தை பறிக்கின்ற, மான உணர்வுகளை சிதைக்கின்ற ஒன்றிய அரசுக்கு எதிராகவும் இதுவரை இந்தியாவில் எந்த அரசியல் கட்சி தலைவரும் எடுக்காத ஒரு முயற்சியை தமிழக முதல்வர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில், தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு இல்லத்துக்கும் சென்று மண், மொழி, மானம் காப்பதற்காக ஓரணியில் வரவேண்டும் என முயற்சியை எடுத்தார்.