
தமிழ் திரையுலகில் இன்று பலரும் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்களாக உள்ளனர். ஆனால், அவர்களில் வெகுசிலர் மட்டுமே அதில் வெற்றி கண்டுள்ளனர். அவர்களில் மிகவும் பிரபலமானவர் விஜய் ஆண்டனி.
இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் வெற்றி கொண்ட விஜய் ஆண்டனி, நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அசத்தி வருகிறார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி, தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாகவும் உலா வருகிறார்.
இவரின் 25-வது படமாக சக்தித் திருமகன் படம் உருவாகியிருக்கிறது. அருவி, வாழ் போன்ற படங்களை இயக்கிய அருண் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு, விஜய் ஆண்டனியின் 25-வது படத்துக்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனியுடன் பணியாற்றிய இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் அம்மா சோபனா கலந்துகொண்டு பேசினார். அப்போது, “என் கணவர் மிகவும் ராசியானவர்.
விஜய் ஆண்டனியை 2005-ம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியதே அவர்தான். பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா என்றப் பெயரை மாற்றி விஜய் ஆண்டனி எனப் பெயர் வைத்தவர் என் கணவர்தான்.
என் கணவரைப்போல விஜய் ஆண்டனியும் மிகவும் ராசியானவர். மியூசிக் டைரக்டராக சிறப்பாகச் செயல்பட்டு கொண்டிருந்த அவருக்கு, திடீரென நடிக்க வேண்டும் என ஆர்வம் வந்தது.
அதன் அடிப்படையில் திரைத்துறையில் தனக்கான ஒரு முத்திரையைப் பதித்து, 25வது படத்தையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.
விஜய் ஆண்டனி வித்தியாசமானவர். அவரைப்போலவே அவரின் கதைத் தேர்வும் வித்தியாசமாக, மிகவும் சிறப்பாக இருக்கிறது. நிச்சயமாக இதைவிட பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…