
புதுடெல்லி: கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் 1,000 கிலோ தங்கம் சீன எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டது அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.800 கோடியாகும். சீன எல்லை வழியாக இந்தியாவுக்குள் தங்கம் கடத்தி வரும் சட்டவிரோத நடவடிக்கைகளில் சீனர்கள், திபெத்தியர்களுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய – சீனா இடையே 3,488 கி.மீ. உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகில் இந்தோ – திபெத் எல்லைப் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் லடாக் பகுதியில் இந்தோ – திபெத் எல்லைப் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.