
திருச்சி: பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு அங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தியது தவறு தான் என்றும், இனி இதுபோன்ற தவறு நிகழ அனுமதிக்க மாட்டேன் என்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: முன்னாள் முதல்வர் பழனிசாமி, தமிழக முதல்வரை ஒருமையில் பேசியது வருத்தத்துக்குரியது. யாராக இருந்தாலும் அரசியலில் நாகரிகம் தேவை. சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை இன்னும் துணை முதல்வர் உதயநிதி தொடங்கவே இல்லை.