
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் அருகேயுள்ள வனப்பகுதியில் புலியை பிடிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக, வனத்துறையினர் 7 பேரை கூண்டில் அடைத்து கிராம மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பந்திப்பூர் தேசிய வனவிலங்கு காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 6 மாதங்களில் 20க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை புலி, சிறுத்தைகள் பிடித்து தின்றதால் கோபம் அடைந்தனர். அதேவேளையில் புலிகளை பிடிக்காமல் வனத் துறையினர் அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.