
கேரளாவில் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டப்படி வெளியாகாது என்கிறார்கள்.
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருக்கும் படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பல்வேறு மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதன் மலையாள வெளியீட்டு உரிமையினை ப்ரித்விராஜ் கைப்பற்றி இருக்கிறார். இதன் வெளியீட்டில் தான் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.