
புதுடெல்லி: நாடு சுந்திரம் அடைந்த பிறகு 1952-ல் நாட்டின் முதல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் சோவியத் ஒன்றியத்தின் தூதராக இருந்த தமிழரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-ல் இரண்டாவது முறையாக இப்பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அவர், 1962-ல் குடியரசுத் தலைவர் பதவியையும் அடைந்தார்.
1962-ல் நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிஹார் ஆளுநர் ஜாகிர் உசேன் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போலவே ஜாகிர் உசேனும் தொடர்ந்து 1967-ல் குடியரசுத் தலைவரானார். இதுவரை எவரும் பெறாத வகையில் மூன்று வெவ்வேறு பிரதமர்களின் ஆட்சியில் குடியரசு துணைத் தலைவர் பதவி வகிக்கும் வாய்ப்பு பி.டி.ஜாட்டிக்கு கிடைத்தது. இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சவுத்ரி சரண் சிங் ஆகியோர் ஆட்சியில் அவர் இப்பதவி வகித்தார்.