
சென்னை: புழுதிவாக்கத்தில் மோசமான சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தினமும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி, 14வது மண்டலம், 186-வது வார்டு, பஜனை கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இதில், பல்வேறு சாலைகள் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், பஜனை கோயில் தெருவில் மட்டும் இன்னும் சாலை அமைக்கப்படவில்லை. ஏற்கனவே பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த புழுதிவாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்லும் இந்த பிரதான சாலையில், மில்லிங்பணி தொடங்கி சாலை பணி முழுமையாக முடிக்கப்படவில்லை.