• September 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நே​பாளத்​தில் சிக்​கி​யுள்ள ஆந்​தி​ராவை சேர்ந்த 240 பேரை அங்​கிருந்து மீட்டு தனி விமானம் மூலம் விசாகப்​பட்​டினம் அழைத்​துவர ஆந்​திர அமைச்​சர் நாரா லோகேஷ் நடவடிக்கை மேற்​கொண்டு வரு​கிறார். நேபாளத்​தில் உள்​நாட்டு கலவரம் ஏற்​பட்​டுள்​ளது. இதில் அங்கு சுற்​றுலா சென்ற இந்​தி​யர்​கள் பலர் சிக்​கி​யுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இவர்​களில் ஆந்​தி​ராவை சேர்ந்​தவர்​களும் உள்​ளனர். இவர்​களில் சிலர் அமராவ​தி​யில் உள்ள ஆந்​திர அதி​காரி​களை தொடர்​பு​கொண்டு தங்​களை பத்​திர​மாக மீட்க வேண்​டும் என கோரிக்கை விடுத்​தனர். இதையடுத்து ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு​வின் மகனும் மாநில கல்​வித்​துறை அமைச்​சரு​மான லோகேஷ், உடனடி​யாக ஐஏஎஸ் அதி​காரி​களு​டன் அமராவ​தி​யில் ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது, நேபாளத்​தில் சிக்​கி​யுள்​ளவர்​களிடம் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேசி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *