
புதுடெல்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன் வாக்காளர் பட்டியலில் சேர்ந்ததாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்றத்தில் விகாஸ் திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி மாவட்ட கூடுதல் தலைமை நீதிமன்ற நீதிபதி வைபவ் சவுராஸியா நேற்று விசாரித்தார்.