• September 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை ஒருங்​கிணைத்​தால் தான் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் கரை சேர முடியும் என கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு 10 நாட்​கள் கெடு விதித்து செங்​கோட்​டையன் போர் கொடி தூக்​கிய நிலை​யில், செங்​கோட்​டையன் மற்​றும் அவரது ஆதர​வாளர்​களின் கட்சி பதவி​கள் பறிக்​கப்​பட்​டன. இதைத்​தொடர்ந்​து, ஹரித்​வார் செல்​வ​தாக கூறி​விட்டு சென்ற செங்​கோட்​டையன், டெல்​லி​யில் அமித் ஷா மற்​றும் நிர்​மலா சீதா​ரமனை சந்​தித்து பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளார்.

இந்த சந்​திப்​பின் போது, 2026 தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சியை பிடிக்க வேண்​டுமென்​றால், ஒருங்​கிணைந்த அதிமுக​வுடன் தேர்​தலை சந்​திக்க வேண்​டும் என அமித் ஷாவிடம் செங்​கோட்​டையன் வலி​யுறுத்​தி​ய​தாக தெரி​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *