• September 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதலில், டிஎஸ்பி-க்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி இந்து முன்னணி நிர்வாகி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து முன்னணி அமைப்பின் சார்பில் திருவாரூர் நகர தலைவர் ஜி.செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், காவல்துறையின் வழிகாட்டுதல்களுடன் இந்து முன்னணி சார்பில் 36-ம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தி திருவிழா மற்றும் சாமி ஊர்வலம் ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற்றபோது, திருவாருர் டி.எஸ்.பி.மணிகண்டன் திட்டமிட்டு, ஊர்வலத்தினர், பக்தர்கள், சிறார்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் தாக்குதல் நடத்தியதுடன், சாமி சிலை மற்றும் ஊர்வல தேரையும் சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *