• September 10, 2025
  • NewsEditor
  • 0

வேலூர்: தவெக தலைவர் விஜய் பிரச்சாரரம் குறித்த கேள்விக்கு, “விஜய் முதலில் வெளியே வரட்டும். பிறகு பார்க்கலாம். அவர் பிரச்சாரத்தை சனிக்கிழமை வைத்தால் என்ன? வெள்ளிக்கிழமை வைத்தால் என்ன? என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருப்புமேடு சாலையில் உள்ள மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று (செப்.10) நடைபெற்றது. இந்த முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு, மனு அளித்த பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி, வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணைமேயர் சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *