
புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலை மொத்தம் 12 எம்.பி.க்கள் புறக்கணித்தனர். டெல்லி நாடாளுமன்றக் கட்டிடத்தில் நேற்று காலை 10 மணிக்கு குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
ஒடிசாவின் முன்னாள் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ஆகிய கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன.