• September 10, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​காமல் அவற்றை கால​வரை​யின்றி ஆளுநர்​கள் நிறுத்தி வைக்க முடி​யாது என உச்ச நீதி​மன்​றத்​தில் கர்​நாட​கா, கேரளா, பஞ்​சாப் மாநில அரசுகள் நேற்று வாதிட்​டன. மசோ​தாக்​களுக்கு 3 மாதங்​களுக்​குள் ஒப்​புதல் அளிக்க ஆளுநர்​களுக்​கும், குடியரசுத் தலை​வருக்​கும் காலக்​கெடு விதித்த விவ​காரத்​தில் குடியரசுத் தலை​வர் எழுப்​பி​யுள்ள கேள்வி​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலை​மையி​லான அரசி​யல் சாசன அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

இதில் கர்​நாடக அரசு தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் கோபால் சுப்​ரமணி​யம் நேற்று வாதிடு​கை​யில், ‘‘குடியரசுத் தலை​வர் எழுப்பியுள்ள கேள்வி​களுக்கு உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே அளித்த தீர்ப்​பு​களில் விடை உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *