
காஞ்சிபுரம்: ‘சமூக நீதிக்கு அடையாளமாக திமுக உள்ளது’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் வந்தார். முதலில் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், வாக்குச் சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான பல்வேறு வழிமுறைகளை கூறியதுடன், கட்சி நிர்வாகிகளின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.இதனைத் தொடர்ந்து, அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.