
நாகப்பட்டினம்: தமிழகத்தில் கடந்த 45 மாதங்களில் 6,700 கொலைகள் நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சில ஆயிரம் கோடியை முதலீடாகப் பெறுவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்து, ஜெர்மனி போக வேண்டிய அவசியமில்லை.
ஏற்கெனவே, முதல்வர் குடும்பத்துடன் வளைகுடா நாடுகளுக்குச் சென்றார். அங்கிருந்து எவ்வளவு முதலீடு கொண்டுவந்தார் என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.