
சென்னை: இந்தியாவில் முதல்முறையாக கடல் வள பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தமிழ்நாடு கடல்சார் வள அறக்கட்டளையை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட வனக்காவலர்கள் மற்றும் வனவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமை தாங்கி, 333 வனப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து இந்தியாவில் முதல்முறையாக கடலோர சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்கும் வகையிலும் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு கடல்சார் வள அறக்கட்டளையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து, அறக்கட்டளையின் இலச்சினை மற்றும் சிறப்பு புத்தகத்தை வெளியிட்டார்.