
சென்னை: அதிமுக 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி சொல்வது அவரது கனவு என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடக்கிறது. இதற்காக தமிழக எம்.பி.க்கள் சென்னையில் இருந்து விமானங்கள் மூலம் நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியரசு துணைத் தலைவர் எதற்காக திடீரென ராஜினாமா செய்தார் என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடக்கிறது.