
சென்னை: தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் பிடிபட்டுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை செல்போன் அழைப்பு ஒன்று வந்தது.
எதிர்முனையில் பேசிய நபர், தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள் எனக் கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.