• September 9, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அமெரிக்​கா​விடம் இந்​தியா மன்​னிப்பு கோர வேண்​டிய அவசி​யமில்லை என காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் தெரி​வித்​து உள்​ளார். ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் உக்​ரைன் போருக்கு இந்​தியா மறை​முக​மாக உதவுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்​றம்​சாட்​டி​னார். ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை குறைத்​துக் கொள்ள வேண்​டும் என்ற அமெரிக்​கா​வின் கோரிக்​கையை இந்​தியா நிராகரித்த​து.

இதையடுத்​து, இந்​திய பொருட்​களுக்கு அமெ ரிக்கா 50% வரி விதித்​தது. இதனால் ஜவுளி, மீன் உள்​ளிட்ட பொருட்​கள் ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், சீனா​வில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்றார். அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங்கை சந்​தித்​துப் பேசி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *