
புதுடெல்லி: அமெரிக்காவிடம் இந்தியா மன்னிப்பு கோர வேண்டிய அவசியமில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்து உள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது.
இதையடுத்து, இந்திய பொருட்களுக்கு அமெ ரிக்கா 50% வரி விதித்தது. இதனால் ஜவுளி, மீன் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.