
சென்னை: சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் பாதுகாப்பான, விரைவான, சொகுசான பயணம் என்பதால், இதில் கூட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது, மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.
2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடியும்போது, பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். எனவே, பயணிகள் தடையின்றி வந்து செல்ல வசதியாக, இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், கூடுதல் இணைப்பு வாகனத்தை இயக்கும் விதமாக, தனியாக துணை நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.