
சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, சேலத்தில் அவரது இல்லத்தில் சேலம், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் சேலத்தில் உள்ள தனது இல்லத்துக்கு திரும்பினார்.
அவரை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏக்கள் எம்.கே.செல்வராஜ், வெங்கடாசலம், முன்னாள் எம்.பி பன்னீர்செல்வம், ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் பழனிசாமி, ஈரோடு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.