
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் ஒரு முழம் மல்லிகை பூவுக்காக நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 6-ம் தேதி மெல்போர்ன் நகரில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கேரள நடிகை நவ்யா நாயர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.