
சென்னை: தேர்தலுக்கு முன்பாகவே கூட்டணி பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: லண்டனில் அம்பேத்கர் படிக்கும்போது தங்கியிருந்த இல்லத்தை முதல்வர் ஸ்டாலின் பார்த்துள்ளார். அந்த இல்லம் ஏலத்துக்கு வருவதை அறிந்து அதனை பாஜக வாங்கியது. அம்பேத்கரை பற்றி புகழ்பாடிக் கொண்டிருக்கும் யாருமே கண்டுகொள்ளாத நிலையில், பாஜக ஏறக்குறைய ரூ.30 கோடி செலவு செய்து, அந்த இல்லத்தை வாங்கி மதிப்புமிக்க நிரந்தர ஆவண காப்பகமாக மாற்றி வைத்திருக்கிறது.