
சென்னை: தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (செப்.9) ஒருசில இடங்களிலும், நாளை பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும். மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.