
சென்னை: முதல்வரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்று வரும் ‘அன்னம் தரும் அமுதக்கரங்கள்’ திட்டத்தின் 200-வது நாளில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பங்கேற்று பொதுமக்களுக்கு உணவளித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் ‘அன்னம் தரும் அமுதக்கரங்கள்’ திட்டம் தொடங்கப்பட்டு பல்வேறு இடங்களில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.