
திருவள்ளூர்: காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை உட்பட 3 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நேற்று முன் தினம் திருவள்ளூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் 17 வயது தம்பி கடந்த ஜூன் 6-ம் தேதி நள்ளிரவில் கடத்தப்பட்டார்.