
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் பாலில் கலப்படம் செய்ததாக தென் சென்னை அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளரான வைத்தியநாதன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு ஆவின் டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட ஆவின் பாலை திருடிவிட்டு, அதற்குப் பதிலாக தண்ணீரை கலப்படம் செய்து மோசடி செய்ததாக அதிமுக அப்போதைய தென் சென்னை மாவட்டச் செயலாளரான வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி உள்ளிட்ட 28 பேர் மீது விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.