
ஹைதராபாத்: மும்பை நகரத்துக்கு அடுத்தப்படியாக தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபட்டனர்.
இந்நிலையில், இன்று காலை முதல் 7-ம் தேதி காலை 10 மணி வரை விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்க உள்ளனர். இதை முன்னிட்டு ஹைதராபாத் நகரே போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.