• September 6, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தெரு நாய் விவகாரம் குறித்து முன்​னாள் மத்​திய அமைச்​சரும் விலங்​கு​கள் நல ஆர்​வலரு​மான மேனகா காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பணக்​காரர்​கள் வசிக்​கும் பகு​தி​யில் உள்ள நலச்​சங்​கத்​தினர், தெரு நாய்​களை பிடித்து செல்ல பணம் வழங்​கு​கின்​றனர். மாநக​ராட்​சி​யும் பணக்​காரர்​கள் வசிக்​கும் பகு​தி​களில் உள்ள நாய்​களை பிடித்து ஏழைகள், நடுத்தர வர்த்​தகத்​துக்கு கீழுள்​ளவர்​களின் பகு​தி​களில் தெரு நாய்​களை விட்டு விடு​கின்​றனர்.

இது​தான் நாய்க்​கடிக்கு பாதிக்​கப்​படு​வோர் எண்​ணிக்கை அதி​கரிப்​ப​தற்கு காரணம். இந்த விஷ​யத்​தில் நாய்க் கடிகளால் பாதிக்​கப்​படு​வோர் யார்? ஏழைகள்​தான். பணக்​காரர்​கள் அல்ல. பணக்​காரர்​கள் வசிக்​கும் பகு​தி​களில் நாய்​கள் எண்​ணிக்கை அவ்​வள​வாக இல்​லை. ஆனால், டெல்லி ரோகிணி காலனி போன்ற இடங்​களில் நாய்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *