
மதுரை: தமிழகத்தில் கோயில் நிதியில் திருமண மண்டபம், வணிக வளாகம், கல்வி நிறுவனங்கள் கட்டுவது தொடர்பாக 2021-22, 2022-23 2023-24, 2024-25, 2025-26 ஆண்டுகளில் அறநிலையத் துறை பிறப்பித்த அறிவிப்பாணைகளை ரத்து செய்யக் கோரி செந்தில்குமார், பாண்டிதுரை, கனகராஜ், நாச்சியப்பன், ராம ரவிகுமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அறநிலையத் துறை சார்பில் அரசு வழக்கறிஞர் பி.சுப்பாராஜ், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ராம.அருண்சுவாமிநாதன், ஜெயராம் சித்தார்த், ஏ.ஆர்.லக் ஷ்மணன், விஷ்ணுவர்த்தன் ஆகியோர் வாதிட்டனர்.