
மதுரை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்ட 9 வழக்கறிஞர்கள் கொண்ட பட்டியலை மத்திய அரசுதிரும்ப அனுப்பியுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றி, உரிய பிரதிநிதித்துவம் வழங்கி, புதிய முன்மொழிவை அனுப்புமாறு மத்திய சட்டத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 56 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 19 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வழக்கறிஞர்கள் கே.கோவிந்தராஜன், இ.வி.சந்துரு(எ) இ.சந்திரசேகரன், பி.வி.பாலசுப்பிரமணியம், என்.சி. அசோக்குமார், ஆர்.காந்தி, அசன்முகமதுஜின்னா, எம்.பி. செந்தில், ஜெ.சந்திரன் சுந்தர் சசிகுமார், இ.மனோகரன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முன்மொழிவு அனுப்பியது.