சென்னை: ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழகத்தின் 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 70 சதவீத மாணவர்கள் உயர்கல்வி படிக்க செல்கின்றனர். இதை ஆசிரியர்கள் 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து நல்லாசிரியருக்கான ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரவப்படுத்தி வருகிறது. விருதாளர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.